வவுனியா மாவட்டத்திலுள்ள அகதிகள் குடியிருப்புகளுக்காக கையினால் இயக்கப்படும் குழாய்க் கிணறுகளை முதலீடு செய்தலும் நிர்மாணித்தலும். இந்த கருத்திட்டங்கள் 1996ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தரைஇறக்கம்
குளியாப்பிட்டி பட்டணத்திற்கும் மற்றும் சோமாவதிய சத்ய என்னும் இடத்திற்கும் தரைகீழ் நீர் கணிப்பீடு செய்தல் மற்றும் நீர்வழங்கல் வசதிகளை அளிப்பதுடன் குழாய்க்கிணறுகளை துளையிடுதல். தரைஇறக்கம்
இது ADB மற்றும் IFAD இனால் நிதியுதவியளிக்கப்படட ஒரு நீர் வள அபிவிருத்திக் கருத்திட்டமாகும். 1995 தொடக்கம் 1998வரையான காலப்பகுதியில், விஞ்ஞான ஆய்வுகள் மூலம் 2077 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு நீர் மாதிரிகள் பகுத்தாராயப்பட்டன. தரைஇறக்கம்
JICA (யப்பான்) இனால் நிதியளிக்கப்பட்ட மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள ஆழத்திலுள்ள தரைகீழ் நீர் கணிப்பீட்டுக்கான முழுமையான கற்கை தரைஇறக்கம்
1995ஆம் ஆண்டு தொடக்கம் பின்வரும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழமான சிறு துளைகள் குறித்த தொழினுட்ப மற்றும் இரசாயன தகவல்களை கணனி மயப்படுத்தலும் கிணறுகளைக் கண்காணித்தலும், ஆழமான சிறு துளையுள்ள இடங்களை விரலியிடல் மற்றும் வரைபடங்களை நாளதுவரை பதிவு செய்தல். சகல பதிவுகளிலும் உள்ள இடைவெளிகளைப் பூர்த்தி செய்து அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் கணனியிலுள்ள தகவல்களை தாளில் அச்சிட்டுப் பெறல். தரைஇறக்கம்
1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்திட்டமானது, புத்தளம் மாவட்டத்தில் இறால் பண்ணைப் பகுதிகளில் ஒரு தரைகீழ் நீர் கண்காணிப்பு வலையத்தை செயல்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது. கருத்திட்டம் 2002ஆம் ஆண்டில் பூர்த்தியாக்கப்பட்டது. கிணறுகள்; EC நீர்மட்டம் மற்றும் உலர்தன்மைக்காக மாதாந்தம் கண்காணிக்கப்பட்டது. தரைஇறக்கம்
திறைசேரி நன்கொடை செயல்திட்டத்தின்கீழ், 1999ஆம் ஆண்டு தொடக்கம் அகதிகள் மீள் குடியிருப்பு மற்றும் சனநெருக்கடியான நகர்ப்புற பிரதேசங்களை உள்ளடக்கிய, தெரிவு செய்யப்பட்ட 85 கிணறுகள் கண்காணிக்கப்பட்டு, பகுத்தாயப்பட்டன. தரைகீழ் நீரின் தரம் மற்றும் தரைகீழ் நீர்மட்ட ஏற்ற இறக்கத்தின் தன்மையின் தற்காலிக வேறுபாடுகளை பதிவுசெய்வதே கண்காணிப்பின் நோக்கமாகும். தரைஇறக்கம்